0164. பூர்வ புண்ணிய ,புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கிரகங்கள் நிற்பதால்
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால்
மனநிம்மதி உண்டாகும்.
அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும்.
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
கையை விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும்.
அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும்.
பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட
முயற்சிகள் பலிதமாகும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைக்கட்டும்.
கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் வலிய
வந்துப் பேசத் தொடங்குவார்கள்.
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல
நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
மேஷம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த
இடமல்ல...
ரிஷபம் உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்த ராகுபகவான் அடுக்கடுக்கான
பிரச்னைகளையும், வீண் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் தந்து
கொண்டிருந்தார்
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலை
வந்துப் போகும்.
உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக நீங்கள் நினைத்துக்
கொள்வீர்கள்.
உறவினர்களில் சிலர் உங்களை அவமதிக்க வாய்ப்பிருக்கிறது.
பிள்ளைகளிடம் உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள்.
பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு அதை சீர்த்திருத்தம்
செய்வதாக நினைத்து அதில் செலவு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வதும் நல்லதல்ல.
சிலர் சொந்த ஊரை விட்டு விலகி வேறு இடத்திற்கு மாற வேண்டிய
சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம் ராகு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டிலேயே தொடர்வதால்
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
பிள்ளைகளிடம் உங்களுடைய எண்ணங்களை திணிக்க வேண்டாம்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம் ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர்
புகழ் அடைவார்கள்.
மிதுனம் சுக்ரன் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் அடிப்படை
வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள்.
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும்.
பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
சிம்மம் ராசிநாதன் சூரியன் 5-ல் அமர்வதால் பிள்ளைகளை அவர்களின்
எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம்.
துலாம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கேது அமர்வதால் எந்த ஒரு
விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.
சில நேரங்களில் மனஇறுக்கம் உண்டாகும்.
பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது.
கோர்ட், கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக்
கொண்டிருக்காதீர்கள்.
கணவன்-மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் பழகுவது நல்லது.
மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
உறவினர்களில் சிலர் உங்கள் நிலையறியாமல் உதவிகேட்டு தொந்தரவு
தருவார்கள்.
குற்றமற்றவர்கள் யாரும் இல்லை.
யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் சிறுசிறு குற்றம், குறைகள்
இருக்கத்தான் செய்யும்.
குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து
செயல்படுவது நல்லது.
விருச்சிகம் 5-இல் கேது தொடர்வதால் பிள்ளைகளால் டென்ஷன்
அதிகமாகும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக்
கொண்டிருக்கும் போது புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.
உறவினர், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும்.
புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
அயல்நாட்டிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக