வியாழன், 13 ஜூன், 2013
093. துலாம் உச்ச சனிபகவான்
093. துலாம் உச்ச சனிபகவான்
துலாம் ராசி, சனி பகவானுக்கு உச்ச வீடாகும்.
தன் உச்ச ராசியில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்கும் சனி பகவான்
அனைவருக்கும் பெரும்பாலும் நன்மையே செய்வார்.
ஏழரை நாட்டு சனி பகவான்!
முதல் சுற்று அதாவது சந்திர பகவானை சனி பகவான் கடந்து
செல்வது சங்கடங்களையும் இடர்களையும் தரும்.
ஏழரை ஆண்டு காலத்தை மங்கு சனி என்பர்.
இரண்டாவது சுற்று பொங்கும் சனி என்பதாகும்.
இதில் கடினமான பலன்கள் குறைந்து புதிய முன்னேற்றத்திற்கு
அடித்தளம் ஏற்படும்.
மூன்றாவது சுற்று மரண சனி எனப்படும்.
சில கண்டங்கள் ஏற்பட்டு விலகும்.
ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக்
கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை
பக்குவப்படுத்துகிறார்.
எப்படி தங்கத்தை சுத்தியால் அடித்துதான் ஆபரணமாக
ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு
உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில்
மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.
மேஷம்
7ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான்
இருக்க வேண்டும்.
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து 7ல் அமர்வதால்
குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும்.
கணவன் & மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து
போகும்.
தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்து சண்டையிடுவீர்கள்.
உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தி
விடுவார்கள்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.
விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக
இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது.
வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு
இருமுறை கவனமாக படித்துப் பார்த்த பிறகு கையெழுத்துப் போடுங்கள்.
சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்.
மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு,
கர்ப்பச் சிதைவால் ஆரோக்யம் பாதிக்கும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள
வேண்டாம்.
மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும்.
உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும்.
சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்
சற்று உடல் நலம் பாதிக்கும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும்.
இரும்பு, நார்ச்சத்துள்ள காய், கனிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
தலைச்சுற்றல்,
அடிவயிற்றில் வலி, முதுகுவலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும்.
உடன்பிறந்தோர் சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார்கள்.
லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது.
பயணங்களில் கவனம் தேவை.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால்,
அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும்
வாய்ப்புள்ளது.
எப்போதும்போல இனிமேல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம்.
செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
மறதியும் பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும்.
சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால்
வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.
அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படும்.
சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால்
கையிருப்புகள் கரையும்.
கடன் வாங்க நேரிடும்.
பரிகாரம் :
சனி பகவானை, அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
ரிஷபம்
6ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை
அள்ளித் தருவார்.
உங்களின் வாழ்க்கைப் பாதையை சீராக அமைத்துக்
கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும்.
சனிபகவான் வக்ரமடைவதால்
பிள்ளைகளால் செலவு,
மன உளைச்சல்,
டென்ஷன் வரக்கூடும்.
உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
பூர்வீகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்துபோகும்.
கர்ப்பிணிப் பெண்கள் மாடிப்படியில் ஏறும்போதும் சாலைகளை
கடக்கும்போதும் சமையல் செய்யும்போதும் கவனம் தேவை.
எடை மிகுந்த பொருட்களைத் தூக்காதீர்கள்.
மனைவிக்கு மாதவிடாய் கோளாறு,
வீண் செலவுகள்,
சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.
சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால்
கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப் பாருங்கள்.
குடலுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை
தவிர்த்துவிடுங்கள்.
சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால்
வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.
மிதுனம்
சனிபகவான் 5ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சமாகி
வலுவடைவதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாமல் தோழமையாக பழகுங்கள்.
அவர்கள் யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார் என்பதை
அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும்.
யோகா, தியானம் மூலம் இதை சரிசெய்து கொள்ளுங்கள்.
தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும்.
சனிபகவான் வக்ரமடைவதால்
வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும்.
தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்
வழக்கு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது.
தொண்டைப் புகைச்சல், யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால்
திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால்
சில நேரங்களில் மனைவிக்கு தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.
சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால்
கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால்
மனைவிக்கு கை, கால் வலி, மறதி வரக்கூடும்.
மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.
பரிகாரம் :
பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம்
நாளில் சென்று வணங்குங்கள்.
கடகம்
அர்த்தாஷ்டமச் சனி
சுக வீடான 4ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல்
இருக்கத்தான் செய்யும்.
எதையும் சமாளிக்கும் மனப் பக்குவத்தை பெறுவீர்கள்.
குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும்.
சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள்.
சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து முடிக்க வேண்டிவரும்.
தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும்.
மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க
வேண்டாம்.
வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும்.
அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
எந்த சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தை சரி பார்ப்பது
நல்லது.
அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும்.
இரவு பயணங்களில் கவனம் தேவை.
விலை உயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல்
தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம்.
குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் சந்தேகத்தால்
அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும்.
பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள்.
தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும்.
அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து
வீடு கட்ட வேண்டாம்.
கழிவுநீர் பிரச்னை,
மின்சார சாதனங்கள் பழுதடைதல்,
வேலையாட்கள் பிரச்னையும் வந்துபோகும்.
எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம்.
வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.
உணவில் வறுத்த,
பொரித்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
சனிபகவான் வக்ரமடைவதால்
அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு,
கடன் பிரச்னை,
வீடு பராமரிப்புச் செலவு,
வாகன விபத்து,
சிறுசிறு நெருப்புக் காயங்கள்,
வாயுக் கோளாறு வந்து நீங்கும்.
மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.
தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும்.
வரவுக்கு மிஞ்சிய செலவுகள்,
வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்,
சொந்த&பந்தங்களுடன் பிரிவுகள் வரும்.
சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம்
வேண்டாம்.
சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால்
கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம்
வரக்கூடும்.
வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம்.
பரிகாரம் :
அஸ்வினி நட்சத்திரம் நாளில்
சிம்மம்
சனிபகவான் 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும்.
சனிபகவான் வக்ரமடைவதால்
யாரையும் நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
பணம் கொடுக்கல் & வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.
பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால்
செலவுகள் கூடும்.
சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால்
பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள்.
பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.
சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு
உங்களை டென்ஷன் படுத்துவார்கள்.
சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால்
சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.
சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும்.
மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.
பரிகாரம் :
அருணாசலேஸ்வரரை விசாகம் நட்சத்திரம் நாளில் சென்று
வணங்குங்கள்.
கன்னி
பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம்
அடைந்து வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும்.
எளிய உடற்பயிற்சிகள்,
உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது.
சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக்
கொள்வது நல்லது.
பாதச்சனியாக வருவதால்
கணவன் & மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும் மனஸ்தாபங்களும்
வந்து நீங்கும்.
வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள்.
முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல்
இருப்பது நல்லது.
யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும்.
காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம்.
தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள்.
அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு
முடியும்.
சாலை விபத்து வந்து போகும்.
வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத்தடை வந்து நீங்கும்.
மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
ரத்த சோகை வரக்கூடும்.
உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி மற்றும் சுவாசக் கோளாறும்
மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும்.
சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தாய்வழியில் மருத்துவச் செலவுகள் வரும்.
வீடு மாறுவீர்கள்.
வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
மனைவியுடன் வீண் விவாதங்கள் வெடிக்கும்.
சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால்
வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால்
உடல்நலத்தில் கவனம் தேவை.
பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள்.
பரிகாரம் :
புதன்பகவானையும் கேட்டை நட்சத்திரம்
துலாம்
ராசிக்குள்ளேயே ஜென்ம சனியாக அமர்கிறார்.
ஜென்ம சனி
உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம்.
அல்சர் எட்டிப் பார்க்கும்.
எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்துபோகும்.
மனைவி வழியில் செலவுகள் வரும்.
திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.
சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம்.
வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள்.
சனிபகவான் வக்ரமடைவதால்
வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள்
வந்து செல்லும்.
வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும்
கவனம் தேவை.
மனைவியுடன் மனஸ்தாபங்கள், மோதல்கள் அதிகரிக்கும்.
செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள்,
வாகனப்பழுது வந்து நீங்கும்.
விபத்து, வீண் சந்தேகம், இனந் தெரியாத கவலைகள்,
மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி வந்து செல்லும்.
சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால்
மனைவிக்கு கால்வலி, கழுத்துவலி வந்து நீங்கும்.
பரிகாரம் :
பொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில்
சென்று வணங்குங்கள்.
விருச்சிகம்
விரயச் சனியாக, அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும்
வருகிறார்.
ஏழரைச் சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார்.
சனிபகவான் 6ம் வீட்டை பார்ப்பதால்
வாகனம் பழுதாகி சரியாகும்.
யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை
இரவல் தர வேண்டாம்.
நீங்களும் இரவல் வாங்க வேண்டாம்.
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள்.
நீதிமன்றம் செல்லாமல் முடிந்தவரை பிரச்னைகளை பேசி
முடிக்கப் பாருங்கள்.
முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை
கலந்தாலோசிப்பது நல்லது.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்
உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சனிபகவான் வக்ரமடைவதால்
திடீர் பயணங்கள்,
வீண் டென்ஷன்,
பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும்.
சனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால்
பணம் வரும்.
ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும்.
பேச்சால் பிரச்னை,
பார்வைக் கோளாறு வரக்கூடும்.
சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால்
தந்தைக்கு நெஞ்சுவலி, கை, கால் அசதி வந்து நீங்கும்.
பரிகாரம் :
யந்திர சனீஸ்வர பகவானை, மகம் நட்சத்திரம் நாளில் சென்று
வணங்குங்கள்.
தனுசு
லாப வீட்டில் அமர்வதால்
சனிபகவான் வக்ரமடைவதால்
உத்யோகத்தில் வேலைச்சுமை,
மறைமுக எதிர்ப்பு,
ஏமாற்றம் வந்துபோகும்.
பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் வரக்கூடும்.
சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால்
டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும்.
செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும்.
சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால்
பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும்.
சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால்
வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேசுவதை
தவிர்ப்பது நல்லது.
சாலையை கடக்கும்போது கவனம் தேவை.
பரிகாரம் :
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளை, அஸ்தம் நட்சத்திரம்
நாளில் சென்று வணங்குங்கள்.
மகரம்
சனிபகவான் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும்.
உங்கள் ராசிநாதனாக சனிபகவான் வருவதாலும் உச்சமாகி
யோகாதிபதியான சுக்கிரனின் வீட்டில் அமர்வதாலும்
யோக பலன்களையே தருவார்.
சனிபகவான் வக்ரமடைவதால்
வீண் விரயம்,
பணப்பற்றாக்குறை,
தந்தையுடன் மனத்தாங்கல்,
அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.
மனைவியின் உடல்நலம் பாதிக்கும்.
மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்
அடி வயிற்றில் வலி,
முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும்.
அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.
திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும்.
யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால்
தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.
தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து
கொள்ள வேண்டாம்.
சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால்
மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு,
சிறுசிறு அறுவை சிகிச்சை,
அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.
சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
தூக்கமின்மை,
சுப விரயங்கள் ஏற்படும்.
பரிகாரம் :
பரிக்கல் நரசிம்மரை, சுவாதி நட்சத்திரம் நாளில் சென்று
வணங்குங்கள்.
கும்பம்
ராசிநாதனான சனிபகவான் 9ம் வீட்டில் உச்சம்பெற்று
வலுவாக அமர்வதால்
உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால்
சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.
தந்தைக்கு ரத்த அழுத்தம்,
முதுகு,
முழங்கால் வலி,
சிறுசிறு அறுவை சிகிச்சை,
அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும்.
சனிபகவான் வக்ரமடைவதால்
இனந்தெரியாத கவலை,
ஏமாற்றம்,
பொருள் இழப்பு,
வாகன விபத்து வந்து செல்லும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால்
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம் :
ஸ்ரீசாந்த சனீஸ்வரரை, புனர்பூசம் நட்சத்திரம் நாளில் சென்று
வணங்குங்கள்.
மீனம்
அஷ்டமத்துச் சனியாக அமர்வதால்
எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது.
வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம்.
குடும்பத்தில் கணவன் & மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி
பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.
குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள்.
நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம்.
வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.
முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.
வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள்.
முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை
கலந்து முடிவெடுப்பது நல்லது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக
உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும்.
யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
வர வேண்டிய பூர்வீக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள்.
சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னால் இகழ்ந்து பேசுவார்கள்.
கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும்.
மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும்.
அறுவை சிகிச்சை உண்டு.
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள்.
சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.
வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த
மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம்.
சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப் பாருங்கள்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும்.
சனிபகவான் வக்ரமடைவதால்
எதிலும் தடுமாற்றமும் வீண் செலவுகளும் வந்துபோகும்.
தந்தையாருடன் மனஸ்தாபங்கள்,
அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.
பணம் வந்தாலும் சேமிப்புகள் கரையும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால்
சிறுசிறு விபத்து,
முன்கோபம்,
வீண் டென்ஷன்,
மனஉளைச்சல்,
ஒற்றைத் தலைவலி,
உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும்.
ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால்
வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம்.
கெட்ட நண்பர்களை தவிர்ப்பது நல்லது.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம்.
குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால்
கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும்.
வீடு மாறுவீர்கள்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்தாமல் உரிய
நேரத்தில் செலுத்திவிடுவது நல்லது.
உறவினர்களுடன் பகைமை வரக்கூடும்.
மஞ்சள் காமாலை,
காய்ச்சல் வந்து நீங்கும்.
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால்
சாதுர்யமாகப் பேசுவீர்கள்.
சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள்.
சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால்
தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும்.
சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால்
வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.
பரிகாரம் :
அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் பஞ்சலோக சனீஸ்வரரை
பரணி நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள்.
சனி பகவானின் வழிபாட்டுத் தலங்கள் :
சனி பகவானுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள் பல இருந்தாலும்
அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது
திருநள்ளாறு தலம்.
அடுத்ததாக தேனி மாவட்டத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குச்சனூர் சனி பகவான்.
ஓமாம்புலியூர் சனிபகவான் (ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது),
திருக்கொள்ளிக்காடு சனி பகவான் (திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது),
திருவானைக்காவல் சனி பகவான் (சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது),
சோழவந்தான் சனி பகவான் (விசாக நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது),
திருப்பரங்குன்றம் சனி பகவான் (ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது),
திருச்செங்கோடு சனி பகவான் (சதய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது),
கொடுமுடி சனிபகவான் (அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது)
ஆகியவையும் சனி பகவானின் அருளைத் தரும் தலங்கள் ஆகும்.
மேற்குறிப்பிட்ட தலங்களில் ஒன்றுக்காவது சென்று வழிபடுவது நலம் பயக்கும்.
விழுப்பு ஆடையை அணியக் கூடாது :
விழுப்பு ஆடை என்பது முதல் நாள் படுக்கையில் அணிந்திருந்தது.
அதை மறுநாள் துவைக்கப் போட்டுவிட வேண்டும்.
அப்படி இல்லாமல் அந்த விழுப்பு ஆடைகளை சனிபகவானின் பிடியில்
இருப்பவர்கள் அதாவது ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி, மற்றும்
அஷ்டம சனி ஆகியவை நடப்பவர்கள் மறுநாளும் அணிந்துகொண்டால்
சனி தோஷம் இன்னும் பலமாகும்.
அதோடு சனியின் பிடியில் இல்லாதவர்களும் விழுப்பு ஆடைகளை
அணியக்கூடாது.
வாழ்க்கையில் செல்வத்தை இழந்து கஷ்டப்படுபவர்கள் பொருளாதார
வளம் சிறக்க 12 வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில்
மஹாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும்.
ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வெள்ளிக் கிழமைகளில்
மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும்.
சனி பகவானுக்கு உகந்த பரிகாரம் :
சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை தலை, கை, கால் மூட்டுகள்,
தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி,
சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும்.
இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் மற்ற கிரகங்களின்
தாக்கமும் குறையும்.
சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் அத்தகையவர்கள் வழுக்கி
விழுந்தாலும் இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது.
சனிக் கிழமைகளில் எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், முடவர்களுக்கும்,
முதியவர்களுக்கும் உதவி வர வேண்டும்.
நள புராணத்தைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம்.
சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும் சனிபகவான் கவசம் ஆகியவற்றை
படிக்கலாம்.
சிவபெருமானிடம் சனி பகவானுக்கு பக்தி அதிகம்.
சனி பகவான், பஞ்சாட்சரமான, ஐந்தெழுத்து மந்திரமான "நமசிவாய'
என்கிற மந்திரத்தை ஜெபம் செய்கின்றவர் என மந்திர சாத்திரங்கள்
பேசுகின்றன.
வைணவர்கள் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேய கவசம் படிக்க வேண்டும்.
குங்குலியப் புகையின் நடுவில் இருந்து கொண்டு ஸ்ரீமத் நிகமாந்த
மகாதேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தைப் படித்தால்
சனி தோஷம் விலகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)