ஞாயிறு, 6 ஜனவரி, 2013
092. பித்ரு தோஷம்
092. பித்ரு தோஷம்
நம்மில் சிலர் தனது முன்னேற்றத்தைப் பற்றிக்
கவலைப்படுவது இல்லை தன்னைச் சுற்றியிருக்கும்
தனது நட்புகள், உறவுகளின் முன்னேற்றத்தைப் பற்றியே
எப்போதும் அக்கறைப்படுவதும், அதற்காக தனது
முக்கியமான வேலைகளையும், கடமைகளையும் நிறுத்தி
வைத்து விட்டு, அடுத்தவர்களின் ஏக்கங்களையும்,
தேவைகளையும் நிறை வேற்றுவதையே தனது
கடமையாக எண்ணுவர்.
இப்படி தன்னால் வாழ்க்கையில் உச்சத்தைத்
தொட்டவர்கள் நன்றி உணர்வு இல்லாமல் இவருக்கு
உதவி எதையும் செய்வதில்லை என்பது மட்டும்
அல்லாமல் இவருக்கு தொந்தரவு தருவார் மேலும்
இவரது முன்னேற்றத்தையும் தடுப்பார் .
இப்படி யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்களில்
பெரும்பாலானவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது.
ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு
குடும்பத்திலும் ஏதாவது கொலை அல்லது தற்கொலை
நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்களின்
எண்ணிக்கை 4 ஐத் தாண்டும்போது அது பித்ரு
தோஷமாக வடிவெடுத்து,
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவர் மட்டும்
பித்ரு தோஷத்துடன் பிறப்பார்.
(I) பிறக்கும் நேரத்தில் ராகு கேதுக்கள் 1,5,9
திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.
(II) பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம்
இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால்
(III) பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை
இருந்தால்
(IV) பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 9ல் சூரியன்
இருந்தால்
பித்ரு தோஷத்தைத் தீர்க்கக் கூடிய திலா ஹோமம்
செய்ய வேண்டும்.
காசி, கயா, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கொடுமுடி,
ராமேஸ்வரம், விஜயாபதி, கன்னியாகுமரி,
திருவனந்தபுரம் மற்றும் சில நகரங்களில் முறையாக
புரோகிதம் செய்பவர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.
அவ்வாறு திலா ஹோமம் செய்தபின்னர், வேறு எந்த
கோவிலுக்கும் செல்லாமலும், வேறு எவர் வீட்டுக்கும்
செல்லாமலும் நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல
வேண்டும்.
அப்படி சென்ற பின்னர், ஓராண்டு வரையிலும் அசைவம்
சாப்பிடக் கூடாது
ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது
ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9
பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய
வேண்டும், இப்படி 12 அமாவாசைகளுக்குத் தொடர்ந்து
செய்தால்தான் பித்ருதோஷ நிவாரணம்
முழுமையடையும்.
அது வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது.
இப்படிச் செய்து முடிப்பத ன் மூலமாக, தற்கொலை
செய்த நமது முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி கிடைக்கும்.
யார் பித்ரு தோஷ நிவாரணம் முறையாக செய்து
முடிக்கிறார்களோ,அவர்களுக்கு நீண்டகால பிரச்னைகள்
தீர்ந்துவிடும் அல்லது நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறும்.
இப்படி பித்ரு தோஷ நிவாரணம் நான்
செய்யப்போகிறேன் என்று பிறரிடம் சொல்வதால்,
அதைச் செய்து முடிப்பதில் பல தடங்கல்கள் வரும்
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஏனெனில், அவ்வளவு பொறாமை நம்மைச்
சுற்றியிருப்பவர்களுக்கு இருக்கிறது.
Example : 01. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 9ல் சூரியன்
பகை ரிஷபம் 20%
Example : 02. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 11ல் செவ்வாய்
நீச்ச வீடு 0% கடகம் சனி பகை வீடு 20% சேர்க்கை
இருந்தால்
Example : 03. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 1ல் ராகு
நட்பு வீடு 60% கன்னி
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம்
mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)