0198. குளிகன் அல்லது குளிகை காலம்
குளிகை என்றால் என்ன?
நமது நாட்காட்டியில் குளிகை என்று ஒன்று இருக்கிறது.
இந்தக் குளிகை என்றால் என்ன?
என்னவெல்லாம் செய்யக் கூடாது?
எந்த நேரத்தில் குளிகையை பார்க்க வேண்டும்?
பொதுவாக குளிகை என்பதில் ஈமச்சடங்கு செய்யக் கூடாது.
இதுவும் ராகு காலம், எமகண்டம் போன்றதுதான்.
குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.
ராகு காலத்தை ராகுவிற்கும், எமகண்டத்தை கேதுவிற்கும் சொல்வது
போல, குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.
அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது.
அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள்.
குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில்
ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும்.
அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக்
கூடாது என்று சொல்வார்கள்.
பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.
குளிகை என்பது நல்ல நேரமா..?
குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா?
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட
போகும்.
கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது
போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது
போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக
முடியும்.
இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்.
குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார்.
எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து.
(தாய்மை, ரிஷான் ஷெரீப், திண்ணை)
நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகவும்
ஈமச்சடங்கு முதலிய கெட்ட காரியங்களுக்குப் பொருத்தமற்றதாகவும்
கருதப்படும் ஒன்றரை மணி நேர அளவு கொண்ட குளிக காலம்
குளிகை நேரத்தை எளிதில் தெரிந்துகொள்ள!
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.