புதன், 9 பிப்ரவரி, 2011

050. அஷ்டமி திதி

050. அஷ்டமி திதி

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என
முன்னோர்கள் கூறுவர்.
அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;
தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது
அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை
சமாளித்தார்; கண்ணன்தானே கொடியவன் கம்சனை
அழித்தான்? இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும்
நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள்
எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான்
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள்
(திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்
உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள்
ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை
என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு
தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி
திதிகள் ஏற்றவையாகும்.

அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?

நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும்
செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச்
செய்வது! இவற்றைதான் கண் மூடிப் பழக்கம்' அவை
என்று.

எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று
சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன!
உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை
எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?

மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை
அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!

காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி'
எனப்படும் எட்டாவது திதியில்தானே!

துர்க்காஷ்டமிம் அன்றுதான் இந்த நாட்களை கண்ணன்,
துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக
வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான
மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர்.
பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று
சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும்
தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர்.
வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.

பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே
ஓம் நமோ நாராயணாயா' என்பது.

நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித்
தேடும் செல்வமும் எட்டு வகை! அவை அஷ்ட ஐஸ்வர்யம்
என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும்
அஷ்ட லட்சுமிகள் என்ற உருவங்கள் உண்டு.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு
திருமுறைகள் சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் பாடிய
தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால்
முற்பட்டவர். மேலும் மணி வாசகர் சொல்லச் சொல்ல
தில்லை சிற்றம்பல வாணன் கைப்பட எழுதியது என்று
நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை
திருவாசகத்திற்கு உண்டு.

அதுமட்டுமல்ல; திருப்பெருந்துறையில் குருந்த
மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக
வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த
உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான்
திருவாசகம். "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க' என்று
முதன்முதல் பாடியதுதான் "சிவபுராணம்' எனப்படும்
திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த
சிவபெருமானே திருவாதவூரரை "மாணிக்க வாசக' என்று
தன் திருவாயால் அழைத்தார்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது
பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில்
பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், "மணிவாசக,
பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்று
திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப்
பெருமான் பாடி யதே திருக்கோவையார் என்னும் அற்புத
நூல். இது அகப் பொருள் துறையில் அமைத்துப் பாடியது.
திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.

எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே "தலைமை
மந்திரம்' என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:

பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-

"ஓம் ஈசானாய நம',
"ஓம் தத்புருஷாய நம',
"ஓம் அகோரேப்யே நம',
"ஓம் வாமதேவாய நம',
"ஓம் சத்யோஜாதாய நம.'
இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-
"ஓம் ஹ்ருத்யாய நம' (இதயம்),
"ஓம் சிரசே நம' (தலை),
"ஓம் சிகாயை நம' (முடி),
"ஓம் கவசாய நம' (கவசம்),
"ஓம் நேத்ரேப்யோ நம' (கண்),
"ஓம் அஸ்த்ராய நம' (கை).

மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும்.
இதில் எட்டாவது மந்திரம் "சிகாயை நம'.

சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில்
எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை.
அதனால் எண் சாண் உடம்பிற்கு  சிரசே பிரதானம்
எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு
மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும்
வெளி.

மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச்
சொல்லப்பட வேண்டியவை:

நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட்.

என்பவையாகும். வணங்கும்போது "நம' என்று சேர்த்துச்
சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி
செய்யும்போது (தானம்) "ஸ்வதா' சேர்க்க வேண்டும்.
யாகத்தில் பொருளைத் தரும்போது "ஸ்வாஹா' என்று
சேர்க்க வேண்டும்.

"ஸ்வாஹா' என்பது அக்னி தேவனின் மனைவி பெயர்.
யாகத் தீயில் இடும் பொருள் களை இந்த "ஸ்வாஹா'தான்
உரிய தேவர் களிடம் கொண்டு சேர்ப்பவள்.

திருவாசகம் எட்டாது திருமுறை. ஆகவே அது சிகா
மந்திரம்- தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில்
மிகவும் உயர்வானது திருவாசகமே.

ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக்
கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட
வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு
கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக்
கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது.

அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால்
தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள்
சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி
தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு
காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி
கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு
அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு
பலன்களை தரும் என்று அவர் கூறினார்.

Example :01. அஷ்டமி திதியில் பிறந்தவர் அத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார்.திருமனம் போராட்டத்தில் 04/11/2005ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.