சனி, 12 டிசம்பர், 2015

0110. சுக்கிர பலம் திசை

0110. சுக்கிர பலம் திசை

சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் அது தவறாகும்.
சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.

சுக்கிர திசை சுக்கிரபுக்தி
சுக்கிர திசையில் சுக்கிர புக்தியானது 3வருடங்கள் 4மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம், ஆடை ஆபரண மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை, திருமண சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, புத்திர பாக்கியம், பகைவரை வெல்லும் வலிமை, கலை, இசைத்துறைகளில் நாட்டம், உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசை சூரிய புக்தி
சுக்கிர திசையில் சூரிய புக்தியானது 1வருடம் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்றிருந்தால் பகைவரை வெல்லும் வலிமை, அரசு வழியில் அனுகூலங்கள் வெளியூர்  வெளி நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவு தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் அமையும் யோகம். அரசியலில் ஈடுபாடு, வீடு மனை சேரும் யோகம் உண்டாகும்.

சுக்கிரதிசை சந்திர புக்தி
சுக்கிர திசையில் சந்திர புக்தி 1வருடம் 8மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பெண்களால் யோகம். ஜலத் தொடர்புடையவைகளால் அனுகூலம் வெளியூர்  வெளிநாட்டு பயணங்களால் லாபம்  தாய் வழியில் மேன்மை, ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பெண் குழந்தை பிறக்கும் யோகம் கணவன் மனைவியிடையே ஒற்றும¬ ஏற்படும்.
நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

சுக்கிர திசையில் செவ்வாய் புக்தி
சுக்கிர திசையில் செவ்வாய் புக்தியானது 1வருடம் 2 மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் இழந்த வீடு மனை சொத்துக்கள் திரும்ப கைக்கு கிடைக்கும்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பகைவர்களை வெல்லும் தைரியம், துணிவு, வீரம் விவேகம் யாவும் உண்டாகும்.
அரசு வழியில் அனுகூலமும் நல்ல நிர்வாகத் திறனும் உண்டாகும்.

சுக்கிர திசையில் ராகுபுக்தி
சுக்கிர திசையில் ராகுபுக்தி 3வருடங்கள் நடைபெறும். 

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள் வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசை குருபுக்தி
சுக்கிர திசையில் குருபுக்தியானது 2 வருடம் 8மாதங்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, எடுக்கும்  காரியங்களில் வெற்றி, அரசு வழியில் ஆதரவுகள், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அமைப்பு, பகைவர்களை அழிக்கும் ஆற்றல் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

சுக்கிர திசையில் சனிபுக்தி
சுக்கிர திசையில் சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும்.  

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம்.
வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசையில் புதன் புக்தி
சுக்கிர திசையில் புதன் புக்தியானது 2வருடம் 10மாதம் நடைபெறும். 

புதன் பலம் பெற்றிருந்தால் கணக்கு, கம்பியூட்டர் துறையில் ஈடுபாடு உண்டாகும்.
தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஆடை ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, பலருக்கு ஆலோசனை கூறும் அமைப்பு, அறிவாற்றல் பேச்சாற்றல், ஞாபக சக்தி கணக்கு துறைகளில் ஈடுபாடு தான தரும காரியங்கள் செய்ய கூடிய வாய்ப்பு அமையும்.
நினைத்து நிறைவேறும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாய் மாமன் வழியல் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிர திசையில் கேது புக்தி
சுக்கிர திசையில் கேது புக்தியானது 1வருடம் 2மாதங்கள் நடைபெறும்.

கேது நின்ற வீட்டதிபதி பலம் இழந்திருந்தால் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்கள் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், தெய்வ பக்தி, பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
தாராள தனவரவும் கிட்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0109. உடல் நிலை பாதிப்பு - இன்ஃபெக்ஷன்

0109. உடல் நிலை பாதிப்பு - இன்ஃபெக்ஷன்

மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன்
சேர்ந்திருப்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன், வரட்டு இருமல் வந்துப் போகும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் 
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும். 
எனவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய், கனி, கீரை வகைகளை உணவில்
அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் யூரினரி இன்பெக்ஷன்,
வாயுக் கோளாறால் நெஞ்சு எரிச்சல் வந்துப் போகும்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும்.
ரிஷபம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் குறைதல், தோலில் நமைச்சல் வந்துபோகும்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால்
அலர்ஜி, இன்பெக்ஷன், சளித் தொந்தரவு வீண் டென்ஷன்,காய்ச்சல்,
சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும்.
கடகம் சூரியன் ராசிக்குள் நுழைவதால் கண் எரிச்சல் வந்துப் போகும்.
சிம்மம் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ரத்தத்தில் சர்க்கரையின்
அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
தொற்று, அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன்
பிரச்னைகள் வந்து நீங்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பெரிய நோய்
இருப்பதாக பயம் வரும். .
சிம்மம் 2-இல் நிற்கும் ராகுவுடன் செவ்வாயும் நிற்பதால் கண் எரிச்சல்,
கண் பார்வைக் கோளாறு வரக் கூடும்.
செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
காலில் அடிப்படக் கூடும்.
சிம்மம் உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் ரத்த சோகை, தலைச்சுற்றல், பைல்ஸ்,
மூச்சுப் பிடிப்பு வரக்கூடும்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால்
உஷ்ணக் கட்டி, இரத்த சோகை வரக்கூடும்.
இரத்தத்தில் இரும்புச் சத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
பச்சை கீரை, காய், கனி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
விஷப் பூச்சிகளான தேள், பூரான் கடிக்க வாய்ப்பிருக்கிறது.
கவனம் தேவை.
சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படும்.
கண் வலி, வீண் செலவுகள் வந்துப் போகும்.
துலாம் உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
அலர்ஜி, இன்பென்ஷனிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் நோய் இருப்பதை போன்ற பயம்
வந்து நீங்கும்.
மகரம் சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் இன்ஃபெக்ஷன், செரிமானக்
கோளாறு வந்து நீங்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0108. பண சொல்வாக்கு பகுதி = III

0108. பண சொல்வாக்கு பகுதி = III

ரிஷபம் உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை வரும்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் பணவரவு ஒரளவுக்கு சிறப்பாக
இருக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பாராத
பணவரவு உண்டு.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள்.
ரிஷபம் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், பணத் தேவைகள் உடனுக்குடன்
பூர்த்தியாகும்
ரிஷபம் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பண நெருக்கடி அதிகரிக்கும்.
ரிஷபம் சூரியன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் எனப்படும் 4–ம் இடத்திற்கு
அதிபதியாவார்.
கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம் புதன் 2-ம் இடத்திற்கு மாறி பலம் பெறுவதால் பண நடமாட்டம்
அதிகரிக்கும்.
ரிஷபம் 4–ல் ராகு சஞ்சரிக்கும் போது  கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தில்
கொஞ்சம் விரயமாகலாம்.
ரிஷபம் ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக
வந்து கொண்டே இருக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் இதைச்செய்வோமா, அதைச்செய்வோமா என்று
சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
ரிஷபம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கின்றார்.
அவருக்குப் பகைவரான குரு வக்ரம் பெற்றிருக்கின்றார்.
சகாய ஸ்தானாதிபதியான சந்திரனோ தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.
யோகம் செய்யும் சனி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.
பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பணவரவு உண்டு.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் வருமானம் உயரும்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மிதுனம் சனிபகவான் 6-ல் நிற்பதால் எதிர்பாராத தொகை ஒன்று
கைக்கு வரக்கூடும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை
கடைசி நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள்.
மிதுனம் ராகுபகவான் உங்கள் விரயாதிபதியுமான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில்  செல்வதால் பணவரவு உண்டு.
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணத்தில் ஒரு
பகுதி கிடைக்கும்.
கடகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
கடகம்  ராகு 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வேற்றுமதத்தவர், மாற்று
மொழியினரால் பண உதவிகள் கிடைக்கும்.
அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
கடகம் செவ்வாய் 3-ல் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியனும் புதனும்
உலவுவதால் பணப்புழக்கம் திருப்தி தரும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
தனவரவு அதிகரிக்க புது யுக்திகளைக் கையாளுவீர்கள்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
கடகம் 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் வராது என்றிருந்த பணம்
கைக்கு வரும்.
கடகம் 2-ல் ராகு இருப்பதால் பொருளாதார நிலை ஏற்ற-இறக்கமாக இருந்தாலும்
தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் பணப்பற்றாக்குறை
நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் இடத்தில் நிற்பதால் பணவரவு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தாராள பணப்புழக்கம் இருப்பதால்
குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்து  விடுவீர்கள்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால்
ஓரளவு பணவரவு உண்டு.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
திடீர் பணவரவு உண்டு.
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
திடீர் பணவரவு உண்டாகும்.
துலாம் விருச்சிகம் சனி உங்களின் பொருளாதார நிலையை மட்டுமே
சோதிப்பார்.
பணமாக சேராமல் சொத்துகளாக சேரும்.
உங்களுடைய வருமானம் ஏதோ ஒரு வகையில் சேமிப்பில் 
சென்றுவிடும்.
பண விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் பண விஷயத்திலும் கறாராக இருங்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பழைய பாக்கிகளை
இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.
பண உதவியும் கிட்டும்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று
அமர்வதாலும் தன ஸ்தானத்தை பார்ப்பதாலும் திடீர் பணவரவு உண்டு.
எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0107. சொத்து வாங்க

0107. சொத்து வாங்க

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் சிறுக
சிறுகசேர்த்து வைத்திருந்த தொகையை முன் பணமாக தந்து தவணை
முறையில் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.
சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
முன் பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த சொத்திற்கு
மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால சொத்துப் பத்திரங்கள், அலுவலகக்
கோப்புகள் ஆகியவற்றை பத்திரப்படுத்தி, எழுதி வைத்துக்கொள்வது
நல்லது.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் சொத்துக்குரிய ஆவணங்கள்,
பத்திரங்கள் தொலைந்து விடாமல்
ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் சொத்து வாங்குவது,
விற்பதில் தடை, தாமதம் ஏற்படும்.
சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம்
பாதத்தில் சனி செல்வதால் ஒரு சொத்தை விற்று மறுசொத்தை
காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா
சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும்.
ரிஷபம் 7-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சொத்து
விஷயம் நல்ல விதத்தில் முடியும்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் ஒரு சொத்தை விற்று மறுசொத்து
வாங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான்  செல்வதால் ஒரு சொத்தை விற்று 
மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.
மிதுனம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி
பார்த்து வாங்குவது நல்லது.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின்
சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில்
ராகுபகவான் செல்வதால் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு
கிடைக்கும்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் சொத்து வாங்கும் போது
தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது.
சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம் குடும்ப ஸ்தானமான 2ம்  வீட்டில் சனி சொத்து விவகாரங்களில்
உள்ள பிரச்னைகள் தீரும். 
பிள்ளைகளின் பெயரில் அசையாச் சொத்து வாங்குவீர்கள்.
எனவே பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து
வாங்குவது நல்லது.
சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன்
செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால்
சொத்து வரியை மறவாமல் செலுத்துங்கள்.
உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம்
பாதுகாப்பாக எடுத்து வையுங்கள்.
விருச்சிகம் குருபகவான் தொழில் ஸ்தானத்திலும், ராகு லாப ஸ்தானத்திலும்,
சனி பகவான் ராசியிலும், கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும்
இருக்கிறார்கள்.
அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை
மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
புதிய சொத்துகள் சேரும்.
சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும்
உலவுவது சிறப்பு.
செவ்வாய் 5-ல் உலவினாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதாலும்,
குரு 8-ல் இருந்தாலும் வக்கிர நிலையில் சஞ்சரிப்பதாலும்
நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். 
தனுசு செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில்
சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த
சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
கும்பம் செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிதாக சொத்து வாங்கும்
யோகம் உண்டாகும்.
மீனம் 8-ல் செவ்வாய் நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பதில்
வில்லங்கம் வந்துச் செல்லும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0106. உடன்பிறந்தவர்கள் பகுதி = III

0106. உடன்பிறந்தவர்கள் பகுதி = III

மூன்றாம் வீட்டு அதிபதி 6, 8,12 ஆம் வீடுகளில்
குடியேறி இருந்தால்

01. சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும்.

02. இளைய உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் அல்லது
அவர்களின் வெறுப்பை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.

03. மூன்றாம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டிலேயே இருந்தால்:

I. ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள்.

II. அவர்கள் பெயர் சொல்லும்படி செல்வத்துடனும்,
புகழுடனும் இருப்பார்கள்.

III. அவர்களால் ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும்
கிடைக்கும்.

IV. ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று
கெளரவமாக இருப்பான்.

V. பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும்
இருப்பான்.

VI. சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.
ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.
ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள்.

04. மூன்றாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:

I. ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக
இருப்பார்கள் அல்லது எதிரிகளாக மாறிவிடுவார்கள்.

II. ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.

III. வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும்.

IV. வைத்தியச் செலவில் பணம் கரையும்.

V. சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள்.

VI. அவர்களால் வேண்டிய அளவிற்குத் தொல்லைகள்
இருக்கும்.

VII. மனதில் நிம்மதி இருக்காது.

VIII. ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக
இருப்பான்.

IX. அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே
பரிசாகக் கிடைக்கும்

05. மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:

I. சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது.

II. தேக ஆரோக்கியம் முழுமையாக இருக்காது.

III. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள்.

IV. வாக்கு வன்மை இருக்காது.

V. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி,
குடும்ப வாழ்க்கை தள்ளாடும்.

VI. சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும்.

VII. சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது.

VIII. சிலருக்குச் செய்யும் தொழிலும் பிடிதமாக இருக்காது.

IX. துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின்
தோள்கள் மீது ஏறிக்கொள்ளும்.

06. மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:

I. ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும்.

II. சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும்.

III. சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

IV. வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும்.

V. கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.

VI. சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள்.

VII. வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.