0138. தொழில்துறையினர்கள்
மேஷம் தொழில் ஸ்தானத்தில் பஞ்சம, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி
சூரியன் அமர அவரை ராசிநாதன் பார்க்கிறார்.
பகை வீட்டில் சூரியன் இருப்பதால் தொழில் சுமாராக நடக்கும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.
மேஷம் குரு 5-ல் நீடிப்பதால் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள்.
ரிஷபம் உங்களுடைய சுகாதிபதியான சூரியன் லாப வீட்டில்
அமர்ந்திருப்பதால் சிலர் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்க
வாய்ப்பிருக்கிறது.
ரிஷபம் பத்தாம் வீட்டையும், பத்தாம் அதிபதி சனியையும் குரு பார்ப்பதால்
தொழில் விருத்தியாகும்.
போட்டிகள் நீங்கும். வங்கியில் இருந்து கடனுதவி
பெரிய ஆர்டர், கான்ட்ராக்ட்களில் கையெழுத்திடுவீர்கள்.
ரிஷபம் தொழில்துறையினர், ஜென்ம ராசிக்கு பாக்கிய தொழில் ஜீவன
ஸ்தானாதிபதியான சனி 7ல் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றம்
பெற முடியும்.
வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க
வேண்டியவை தடையின்றி கிடைக்கும்.
ரிஷபம் உங்களுக்கு பாக்கியாதிபதியும், பாதகாதிபதியும் சனிதான்,
கூட்டாளிகளிடமும் ெதாழிலாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.
தொழில் ரீதியான பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபம்
குறையாது.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது சிலர்
உத்யோகத்தை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்குவீர்கள்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் தொழிலில் போட்டி ஏற்படும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானத்தையும், பாக்யாதிபதி சனியையும் குரு
பார்ப்பதால் வியாபாரம் விருத்தியாகும்.
புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் யோகம் உள்ளது.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
செய்து வரும் தொழில்விருத்தி அடையும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் தொழில்நுட்பத் திறமை வெளிப்படும்.
கடகம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
கடகம் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கின்றார்.
பெரிய முதலீடுகள் செய்யும் பொழுது பங்குதாரர்களின் குணத்தையும்
அறிந்து அவர்களின் ஜாதகத்தையும் ஆராய்ந்து ஏற்றுக் கொண்டால்
சிக்கல்களிலிருந்து மீள வழிபிறக்கும்.
கடகம் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால்
புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.
வேறு தொழில் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது.
பெரிய ஆர்டர், கான்ட்ராக்ட்கள் எடுப்பீர்கள்.
வேலையாட்களால் சில வருத்தங்கள் வந்து நீங்கும்.
கடகம் புதன் 10-ம் இடம் மாறுவது சிறப்பாகும்.
கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற
இனங்கள் லாபம் தரும்.
தொழில் முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புக் கூடிவரும்.
சிம்மம் சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டுத் தொழில்
தொடங்கும் யோகம் உள்ளது.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கூட்டுத் தொழிலை
முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் சிலர்
சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.
கன்னி ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய தொழில்
வாய்ப்புகள் தேடி வரும்.
கூட்டாக தொழில் தொடங்கும் யோகம் உள்ளது.
வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நலம் தரும்.
துலாம் சிம்மம் குருபெயர்ச்சி பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில்
செய்பவர்கள் நல்ல தன லாபத்தினை அடைவார்கள்.
தொழிலில் உள்ள கடன்பாக்கிகளை நிலுவையில் வைத்துக்கொள்வதை
தவிர்க்கவும்.
துலாம் விருச்சிகம் சனி ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், தோல்,
சிமென்ட், இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம் போன்றவை
சிறப்பான முன்னேற்றம் காணும்.
விருச்சிகம் விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய தொழில்
தொடங்கும் யோகம் உண்டு.
தனுசு சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் கூட்டுத்தொழிலில்
பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்னை செய்தாலும் இறுதியில்
உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.
தனுசு ஆதாய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டாக தொழில்
தொடங்கும் யோகம் உள்ளது. வேலையாட்களால் செலவுகள்,
வருத்தங்கள் வந்து நீங்கும்.
மகரம் பன்னிரெண்டாம் வீட்டையும், உங்கள் ராசிநாதன் சனியையும்
குரு பார்ப்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் ஆரம்பிப்பீர்கள்.
புதிய கிளைகள் திறக்கும் யோகம் உண்டு.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக