வியாழன், 7 ஜூலை, 2016

0215. பூர்வீக இடத்துக்கு இடம் பெயர்வது

0215. பூர்வீக இடத்துக்கு இடம் பெயர்வது

ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வதும் நல்லதல்ல.

விருச்சிகம்

1.1.2016 முதல்  7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் 31.12.2016 வரை
உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு லாப 
ஸ்தானத்தில் அமர்வதால் பூர்வீக சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய
பங்கு கைக்கு வரும்.
கேது 4ம் வீட்டில் அமர்வதால் தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும்.
2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை
குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
30.4.2015 முதல் 1.8.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே
சனி வக்கரித்து செல்வதால் பூர்வீக சொத்தை சீர்  செய்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று
அமர்ந்திருக்கும் பூர்வீக சொத்துப் பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும்.
5-ம் வீட்டில் கேது நிற்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பூர்வீகச்
சொத்துகளிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.
வருமானம் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே கிடைக்கும்.
இதனால் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.
27.2.2016 முதல் 9.9.2016 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய்
சனியுடன் சேர்ந்து நிற்பதால் பூர்வீகச் சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும்.
5.7.2015 முதல் 1.8.2016 வரை குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம்
வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
14.04.2016 துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டிலேயே
தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல்
வந்து சேரும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால்
பூர்வீக சொத்தால் பணம் வரும்.
1.1.2016  முதல்  31.12.2016 வரை நவக்கிரகங்களில் நன்மையான பார்வையைத்
தருபவர் குரு பகவான்.
அதுமட்டுமல்ல உங்கள் ராசிக்கும் அதிபதியாக விளங்குபவர். 
அப்படிப்பட்டவரோடு ராகு பகவான் இணைந்து 9–ல் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக
சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை சுமுகமாக முடியும்
1.1.2016 வருடத் தொடக்கத்தில் அதிசாரத்தில் இருக்கும் குரு பகவான் கன்னி
ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவர் 7.2.2016 முதல் 1.8.2016 வரை மீண்டும் உங்கள் ராசிக்கு 9–ம் இடமான
சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.
இதில் 17.5.2016 வரை சிம்மத்திற்கு உள்ளேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
18.5.2016 முதல் வக்ர நிவர்த்தியாகி 1.8.2016 வரை சிம்மத்திலேயே சஞ்சரித்து
அதன் பார்வை பலத்தால் சிறப்புகளை உங்களுக்கு வழங்கப்போகின்றார். 
பூர்வீக சொத்துக்களை விட்டுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம்
நிறைவேறும்.
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால்,
தந்தை வழி சொத்துக்கள் தடையின்றி வந்து சேரும்.
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்
காட்டுவீர்கள்.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குரு பகவான் 9–ம் இடத்தில் பூர்வீக சொத்துக்களில்
வீடுகட்ட ஒருசிலர் விரும்புவர்.
ஒருசிலர் அதைக் கொடுத்து விட்டு அதற்கு இணையான சொத்துக்களை வாங்கிக்
குடியேற வேண்டும் என நினைப்பர்.
30-10-2015 முதல் 8-3-2016 வரை சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது!
முன்னோர் வழி  சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.
கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை) :
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக் கள் வாங்குவதில் கவனம்
செலுத்துவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக