வியாழன், 23 ஜூன், 2016

0214. உடன்பிறந்தவர்கள் ராசி

0214. உடன்பிறந்தவர்கள் ராசி

உடன்பிறந்தவர்கள்

தனுசு

2017 தை மாதத்திலிருந்து உடன்பிறந்தோர் வகையில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகள் மறையும்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை சகோதர சகோதரிகளுக்கு நன்மைகளும்
நலன்களும் உண்டாகும்.
அவர்களாலும் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.
5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு தனது 7ம்
பார்வையால் பார்ப்பதால் இளைய சகோதர, சகோதரி வகையில் இருந்து வந்த
பிணக்குகள் நீங்கும்.
பாசமழை பொழிவார்கள்.
ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடர்வதால் 14.04.2016 துர்முகி வருடத்திலும்
ராசிநாதன் குருபகவானின் உங்கள் ராசிக்கு சனிபகவானே தனாதிபதியாக
இருப்பதால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும்
ராசிக்கு 11ல் அமர்வதால் மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
8.1.2016 முதல் கேது 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் இளைய சகோதர வகையில்
இருந்த பிணக்குகள் நீங்கும்.
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம்
நட்சத்திரத்தில் 25.1.2015 முதல் 29.4.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 
15.11.2016 வரை செல்வதால் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும்
நன்மை உண்டாகும்.
08.01.2016 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் ராசிக்கு மூன்றாவது வீட்டில்
முகமலர்ந்து அமர்கிறார்.
இளைய சகோதர  வகையில் நன்மை உண்டாகும்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை சனி உங்கள் ராசிக்கு 2, 3-க்கு
அதிபதியாவார். சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் சகோதரர்களைச்
சார்ந்து இருப்பவர்கள் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குருவின் பார்வை சகோதர ஸ்தானமான
மூன்றாமிடத்தில் பதிவதால் உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு வந்திணைந்து
உதவிக்கரம் நீட்டுவர்.
08-01-2016 முதல் 27-07-2017 வரை ஒன்பதாம் இடத்து ராகுவால் பங்காளிப் பகை
மாற எடுத்த முடிவில் திசை திருப்பம் ஏற்படும். உடன்பிறப்புகளின் கல்யாணத்தை
நடத்திப்பார்பீர்கள்.
08-01-2016 முதல் 27-07-2017 வரை கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப்
போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் வழியில் சில
விரயங்களைச் செய்ய நேரிடும்.
உடன் பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்கவும், சகோதர வழியில்
சச்சரவு ஏற்படாமல் இருக்கவும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சகோதர வழியில் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு மன அமைதி குறைவு
ஏற்படலாம். 
நல்ல லாபம் வந்தும் நமக்கு போதுமான தொகையை தரவில்லை என்று
சகோதரர்கள் முறையிடுவர்.
எவ்வளவு செய்தாலும் இவர்களுக்கு நன்றி இல்லையே என்று நீங்கள்
நினைப்பீர்கள்.
இதுவரை ஒத்துப்போன சகோதர, சகோதரிகளின் குணம் இப்பொழுது கொஞ்சம்,
கொஞ்சமாக மாறலாம்.
பெற்றோர்கள் உங்களிடம் தான் பிரியமானவர்களாக இருக்கிறார்களே என்று
அவர்கள் நினைப்பார்கள். 
உடன்பிறப்புகள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது
நல்லது.
ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017
வரை): உடன் பிறப்புகளால் உபத்திரவங்கள் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக