செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

0192. ராகுவும், குருவும் சேர்ந்திருப்பதால்

0192. ராகுவும், குருவும் சேர்ந்திருப்பதால்

ரிஷபம் 4ல் குருவும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது தூக்கமில்லாமல்
போகும்.
அயல்நாட்டுப் பயணங்கள் வரும்.
பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் யோசிப்பீர்கள்.
அந்தப் போக்கை விட்டுவிடுவது நல்லது.
எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். 
கடகம் இரண்டாம் வீட்டிலுள்ள குரு ராகு இருப்பதால் குடும்பத்தில்
யாரேனும் வெளிநாடு செல்வார்கள்.
சிம்மம் ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் ஒருவித படபடப்பு,
பதட்டம், முன்கோபம், பசியின்மை, செரிமானக் கோளாறு
வந்துச் செல்லும்.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்துச் செல்லும்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
தோலில் நமைச்சல், பித்தம் அதிகரித்தல், மஞ்சள் காமாலை, காய்ச்சல்
வந்துச் செல்லும்.
வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், நெஞ்சு எரிச்சல், மூச்சுப் பிடிப்பு,
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துச் செல்லும்.
வழக்கில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
நெருங்கிப் பழகியவர்களில் சிலர் உங்களை தவறாகப் புரிந்துக்
கொண்டு விலகுவார்கள்.
கன்னி 12-ல் குருவும், ராகுவும் மறைந்திருப்பதால் யாருக்காகவும்
ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
அந்தச் செலவுகளால் நன்மைதான்.
திடீர் பயணங்கள், அலைச்சல், தூக்கமின்மை வந்துச் செல்லும்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும்.
பணவரவு அதிகரிக்கும்.
பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து
பத்திரப் பதிவு செய்வீர்கள்.
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.
விசேஷங்களால் வீடு களைக்கட்டும்.
வெளிநாட்டு வருமானம் அதிகமாகும் அல்லது வெளிநாட்டில் வேலை
கிடைக்கும்.
பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைக்கட்டும்.
ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
விருச்சிகம் 10-ல் ராகுவும், குருவும் நிற்பதால் அடுத்தடுத்த வேலைகளால்
டென்ஷனாவீர்கள்.
அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம்.
சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.
ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகமாகும்.
மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 
உங்கள் திறமை மீது உங்களுக்கே சந்தேகம் வரும்.
திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய காரியங்களில்
ஈடுபட வேண்டாம்.
யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம்.
விருச்சிகம் பதினோராம் வீட்டில் குரு ராகுவும் இருப்பதால் வெளிநாடு
சம்பந்தமான நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும்.
மகரம் ராகுவும், குருவும் 8-ல் நிற்பதால் சிறுசிறு அறுவை சிகிச்சை,
ஏமாற்றம்,அடிவயிற்றில் வலி வந்துப் போகும்.
சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள்.
வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
பயணத்தின்போது விழிப்பு தேவை.
உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் சரிவர
ஆற்றிவருவது நல்லது.
புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக