வெள்ளி, 18 டிசம்பர், 2015

0114. கணவன்-மனைவிக்குள்

0114. கணவன்-மனைவிக்குள்

ரிஷபம் சப்தமாதிபதியான செவ்வாயுடன் சனி  சேர்வதால் கணவன்-மனைவிக்குள்
மனக்கசப்புகள் வரும்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே
ஒற்றுமைக் குறைவு ஏற்படலாம்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுனம்  குருபகவான் 2-ல் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும்.
மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை வரவேற்பார்.
மனைவி வழி உறவினர்களாலும் உதவிகள் உண்டு.
மிதுனம் சூரியன் 7-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் முன்கோபத்தை
குறையுங்கள்.
கணவன்-மனைவிக்குள் எதையும் மறைக்க வேண்டாம்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று
சேருவீர்கள்.
சிம்மம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் கேது அமர்வதால்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும்.
சின்னச் சின்ன பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள்.
பிரிவு வரக்கூடும்.
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் மனைவி
சிலநேரங்களில் கோபமாகப் பேசுவார்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக