சனி, 15 ஜூன், 2019

கோடீஸ்வர யோகம், கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.
கலைத்துறையில் யோகம் ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.
குரு - சந்திர யோகம்

யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன.
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம்.
குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம்.
இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
கல்வியில் பிரகாசிப்பார்கள்.
கல்வியில் சாதனை ஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.
சந்திராதிபதி யோகம் ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
வசுமதி யோகம் ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
சண்டாள யோகம், ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
சகடையோகம், சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் எதுவும் ஏற்படாது.
குரு மங்கள யோகம், ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
ஹம்ச யோகம், ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
கஜகேசரி யோகம் ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ராஜயோக பலன் குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.

ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?

ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள். மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது.

எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம்கூட கிடைக்காது. அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும்.

சூரியன் துலா ராசியில் நீசம் அடையும்.

சந்திரன் விருச்சிக ராசியில் நீசம்.
குரு மகர ராசியில் நீசம்.
புதன் மீன ராசியில் நீசம்.
சுக்கிரன் கன்னி ராசியில் நீசம்.
சனி மேஷ ராசியில் நீசம்.
செவ்வாய் கடக ராசியில் நீசம்.

நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?

நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க
ராஜயோகம்.

நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.

வியாழன், 8 நவம்பர், 2018

0268. அமிர்தாதி யோகங்கள்

0268. அமிர்தாதி யோகங்கள்

யோகம் என்றால் சேர்க்கை என்று பொருள்.
நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகளின் சேர்க்கையால் நான்கு விதமான யோகங்கள் உண்டாகின்றன.
அவைகளுக்கு அமிர்தாதியோகங்கள் என்று பெயர்.

தினசரி உண்டாகும், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், மரணயோகம், நாசயோகம், ப்ரபலாரிஷ்டயோகம் என்பவை. இவற்றில் அமிர்தயோகம் சித்தயோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை.
நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல.
இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை.

அமிர்தாதி யோக அட்டவணையை கவனித்துப்பார்த்தால் ஒரு விசயம் கண்ணில்படும்.
அதாவது புனர்பூசம்,பூரம்,ஸ்வாதி,உத்திரட்டாதி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ,பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை.
எனவே இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களும் சித்தியாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 செப்டம்பர், 2018

0267. கோமதி சக்கரம்

0267. கோமதி சக்கரம்

ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது.
இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.

கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள்.
அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.

கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.

கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும்.
நிம்மதியைக் கொடுக்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

0266. பித்ரு தோஷம்

0266. பித்ரு தோஷம்

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

தீய விளைவுகள்

திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.
விவாகரத்து ஏற்படலாம்
தம்பதியினரிடையே அன்னியோன்னியம் இருக்காது
குழந்தைப் பாக்கியம் இருக்காது
கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும்.
மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு
கலப்புத் திரும ணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

இராமபிரான் இந்து ஆன்மீகம் 0110. பித்ரு பூஜை

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

0265. சங்கு தீபம்

0265. சங்கு தீபம்

செவ்வாய் தோஷம், தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான
பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி
சங்குக்கு மட்டுமே உண்டு.

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு
உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கு தீபம் வழிபட்டு
வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.

கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும்.
கடன் பிரச்சினை நீங்கும்.
வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

வலம்புரிச் சங்கு தீபம் செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வாஸ்து தோஷம்
அதிகக் கடன் வாங்கியவர்கள்
பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

இராமபிரான் இந்து ஆன்மீகம் 0109. சங்கு தீபம்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

0264. ஒரே கணப் பொருத்தம்

0264. ஒரே கணப் பொருத்தம்

நட்சத்திரங்களில் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக
அமைந்திருந்தால் அதனை மிகவும் மேலான பொருத்தமாக கருத வேண்டும்.

தேவக் கணம் :

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர் பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம்,
ரேவதி போன்றதாகும்.

மனுஷ கணம் :

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி,
உத்திரட்டாதி ஆகியவையாகும்.

இராட்சஸ கணம் :

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்
ஆகியவை.

Example 01. மனுஷ கணம் ரோகிணி = பூராடம் ஒரே கணப் பொருத்தம்
Example 02. மனுஷ கணம் ரோகிணி = உத்திரம் ஒரே கணப் பொருத்தம்
Example 03. மனுஷ கணம் ரோகிணி = பூரட்டாதி ஒரே கணப் பொருத்தம்
Example 04. மனுஷ கணம் திருவாதிரை = பூராடம் ஒரே கணப் பொருத்தம்
Example 05. மனுஷ கணம் பூராடம் = பூரம் ஒரே கணப் பொருத்தம்
Example 06. மனுஷ கணம் பூரட்டாதி = பூரட்டாதி ஒரே கணப் பொருத்தம்
Example 07. இராட்சஸ கணம் ஆயில்யம் = அவிட்டம் ஒரே கணப் பொருத்தம்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 1 ஜனவரி, 2018

0263. வீட்டில் மரம் வளர்க்க வேண்டும்?

0263. வீட்டில் மரம் வளர்க்க வேண்டும்?

01. ஒரு புங்க மரம்
02. புல்வெளி

வீட்டின் நிருதி  (தென்மேற்கு) மூலை வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள்
எதுவும் நிகழாது.
03. வீட்டுக்கு முன்பாக ஒரு வேப்ப மரம் இருக்க வேண்டும்.
04. அதற்குப் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும்.
05. ஒரு பப்பாளி மரமும் இருக்க வேண்டும்.

06. தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் நட வேண்டும்.

07. பாத்திரங்கள் கழுவும் இடத்துக்கு அருகில் தென்னை மரம் இருக்க வேண்டும்.
08. ஒரு எலுமிச்சை மரமும் இருக்க வேண்டும்.
09. எலுமிச்சை மர நிழலிலேயே ஒரு கறிவேப்பிலை செடி நட்டு வைக்க வேண்டும்.

010. துளசி
011. வீட்டுக்கு ஒரு நெல்லிக்காய்ச் செடி கட்டாயம் இருக்க வேண்டும்.

012. வறட்சி அதிகமாக உள்ள இடங்களில் சீதா, சீமை இலந்தை போன்ற பழங்களை
வளர்க்கலாம். 
வேலியின் நான்கு இடத்தில் சீதாப்பழம் மரம் இருக்க வேண்டும். 4

013. காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் பலா, அன்னாச்சி , ஆரஞ்சு
வகைப் பழங்களை வளர்க்கலாம். 
வீட்டில் நிறைய இடம் இருந்தால் பலாக்கன்றும் நடலாம்.

014. மா மரம் வைக்க வேண்டும். 10
015. கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
015. செடிக்காய்களான வெண்டைக்காய், முள்ளங்கி,கொத்தவரங்காய் ஆகியவை சின்ன
பைகளில் நேரடியாக விதைக்கலாம்.

016. அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை
பெரிய பை அல்லது 20 லிட்டர் வாளிகளில் நடலாம்.
இவற்றில் அவரை, புடலங்காய், பாகற்காய் கொடி காய்களாகும்.
அவற்றை பந்தலிட்டு படரவிட வேண்டும்.
அவரைகாயில் கொடியும் உள்ளது. செடியும் உள்ளது.

017. பழ வகைகளில் மாதுளைக்கு 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்ளாஸ்டிக்பை
அல்லது 50 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம்.
கொய்யாக்கு 75 லிட்டர் முதல் 100 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம்.

018. இட்லிபூ (வெட்சி) செவ்வரளி, மஞ்சளரளி ஆகியவற்றை 20 லிட்டர் பெயிண்ட்
வாளிகளில் வளர்க்கலாம்.

019. பூச்செடிகள் என்றால் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சாமந்தி (செவ்வந்தி)
சம்மங்கி ஆகியவற்றை மொட்டைமாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

020. கீரைகளில் கொத்தமல்லி, சிறுகீரை, அரைக்கீரை, பாலாகீரை, தண்டுக்கீரை,
வெந்தயக்கீரை, மிளகுத்தக்காளிக்கீரை ஆகியவற்றை விதைகள் மலம் உற்பத்தி செய்யலாம்.
புதினா, பொன்னாங்கனிக்கீரை ஆகியவற்றை குச்சி (போத்துகள்) மூலம் நடவு செய்து
உற்பத்தி செய்யலாம்.
வல்லாரை கீரை மட்டும் வேர்கள் மூலம் நடவு செய்து உற்பத்தி செய்ய முடியும்.

021. மாடியில் பன்னீர் திராட்சைப் பந்தல்.

022. மணத்தக்காளி, ஓமவல்லி போன்ற செடிகளை மாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

023. சோற்றுக் கற்றாழை 6 மாடித் தோட்டத்தில் அவசியம் வளர்க்க
வேண்டும்.

024. மாதுளை,ஆரஞ்சு போன்ற பழங்களையும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

025. அதிகமாக வெய்யில் உள்ள பகுதிகளில் மா, வாழை. கொய்யா,பப்பாளி,
சப்போட்டா போன்ற பழங்களை வளர்க்கலாம். 

026. மலைப் பிரதேசங்களில் குளிர் அதிகம் உள்ள இடங்களில் ஆப்பிள், பிளம்ஸ்,
பேரிக்காய், ஸ்ட்ராபரி போன்ற பழங்களை வளர்க்கலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 30 நவம்பர், 2017

0262. வீட்டின் அறை அமைப்பு

0262. வீட்டின் அறை அமைப்பு

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும்
வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும்.
இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப்
பெரியதாக இருக்கவேண்டும்.

2. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும்.
வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.

3. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

4 பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும்.

5. வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது,
சத்தம் எழுப்பக்கூடாது.

ஜன்னல்கள் :

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.
ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.

2. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும்
வரும்படி அமைக்கவேண்டும்.

3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.

4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு
திசையை நோக்கியபடி இருக்கவேண்டும்.

5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.

படுக்கையறை :

1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும்.
ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.

2. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

சமையலறை :

1. சமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி
அமைக்கவேண்டும்.

2. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில்
விழும்படி அமைக்கவேண்டும்.

3. சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை :

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ
வரும்படி அமைக்கவேண்டும்.
கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.

2. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும், வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும்
இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது.

கழிவறைகள் :

1. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள்
அமைக்கலாம்.

2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.

3. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை
வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.

4. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும்.

5. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக
இருக்கவேண்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.