வியாழன், 31 டிசம்பர், 2015

0135 கேது பலமிழந்திருந்த திசை

0135. கேது பலமிழந்திருந்த திசை

கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்.
கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது.
ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கேது திசையில் கேதுபுக்தி
கேதுதிசையில் கேது புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கெடூர செயல்களை செய்யும் நிலை, விதவைகளால் பிரச்சனை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்கு, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

கேது திசை சுக்கிர புக்தி
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் வறுமை, அரசு வழியில் கெடுபிடிகள், வண்டி வாகனத்தால் நஷ்டம், மனதில் கலக்கம், பெண்களால் பிரச்சனைகள், பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம், இடம் விட்டு இடம் சென்று சுற்றி திரியும் நிலை, சர்க்கரை நோய் உண்டாகும்.

கேது திசா சூரிய புக்தி
கேது திசையில் சூரிய புக்தி யானது 4மாதம் 6நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலமிழந்திருந்தால் தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, தொழில் வியாபார நிலையில் வீண் விரயம், பதவியில் நெருக்கடி, உத்தியோக இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, உறவினர்களிடையே பகை, தலை காதுகளில் வலி, தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும்.

கேது திசா சந்திர புக்தி
கேது திசையில் சந்திர புக்தியானது 7மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிறு கோளாறு, ஜலதொடர்பான உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளில் பகை விரோதம், வீடு மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.

கேது திசா செவ்வாய் புக்தி
கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலமிழந்திருந்தால் வண்டி வாகன விபத்துக்களால் ரணகாயம், திருடர் பயம், வயிற்று போக்கு, மனைவி பிள்ளைகளிடையே கலகம் ஜீரம்,  அம்மை,  கட்டி, புண்,  பகைவரால் தொல்லை உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடைய« பகை வீண்பழிகளை சுமக்கும் நிலை உண்டாகும்.

கேது திசை ராகு புக்தி
கேது திசை ராகு புக்தியானது 1வருடம் 18நாட்கள் நடைபெறும். 

கேது திசையில் ராகுபுக்தி என்பதால் அவ்வளவு அனுகூலமான பலன்களை அடைய முடியாது.
பெண்களால் கலகம், விதவை பெண்களுடன் தொடர்பு, தரித்திரம், உறவினர்களின் தொல்லை, அரசாங்க வழியில் கெடுபிடிகள் அடிமைத் தொழில், குடும்பத்தில் நோய், இடம் விட்டு இடம் மாறி சுற்றி திரியும் நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கேது திசையில் குருபுக்தி
கேது திசையில் குருபுக்தியானது 11மாதம் 6நாட்கள் நடைபெறும். 

குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பயணங்களால் அலைச்சல் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே பிரச்சனை, சுப காரியத்தடை, பிராமணர்களின் சாபம், கெட்ட காரியத்தில் ஈடுபடும் நிலை பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும்.

கேது திசை சனிபுக்தி
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். 

சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம் தாய் தந்தைக்கு தோஷம் எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, கஷ்டஜீவனம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேது திசையில் புதன் புக்தி
கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

புதன் பலமிழந்திருந்தால் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடையே பகை, வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை, தாய் மாமன் வழியில் விரோதம், கருசிதைவு, எடுக்கும் காரியங்களில் தடை, நரம்பு தளர்ச்சி, தலைவலி, போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக