044. பஞ்சாங்கம் பஞ்சாங்கக் கணிப்புகள் பஞ்சாங்கங்களிடையே வாக்கியம்; திருக்கணிதம் என வேறுபாடுகள் உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தைக் கையில் வைத்திருக்கும் ‘குருக்கள்’ அல்லது ‘ஜோதிடர்’ ஒன்றைச் சொல்ல; திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்திருப்பவர் வேறொன்றைச் சொல்வார். இதனால் எந்தப் பஞ்சாங்கம் சொல்வதை நம்புவது என்னும் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது ! பஞ்சாங்கம் கணிப்பதில், வாக்கியம்/திருக்கணிதம் என இரண்டு பிரதான முறைகள் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற சந்தேகம், ஆரம்பத்தில் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இந்திய ‘ஜோதிட’த்தில் நட்சத்திரம், மற்றும் கிரகங்களது கோண அளவுகள் யாவும் ‘அயனாம்ச’ அளவீட்டினுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பஞ்சாங்கங்களில் இடம்பெறுகின்றன. இந்த அயனாம்சக் கணிப்பில் வாக்கிய பஞ்சாங்கமும்,திருக்கணிதமும் வேறுபட்டிருக்கின்றன. இதே போன்று கே.பி; இராமன்; லஹிரி எனப் பல வகையான ‘அயனாம்சக் கணிப்புகள்’ இப்போது புழக்கத்தில் உள்ளன. இதன் காரணமாகப் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தினைக் கூட முன்பின்னாகக் குறிப்பிடும் நிலை உள்ளதால், சாதாரண வாசகன் இதனால் குழப்பமடைவது இயல்பானதே. அதுவும், ஒரு நட்சத்திரத்தின் ஆரம்பத்திலோ அல்லது அந்த நட்சத்திரம் முடிவுறும் சமயத்திலோ பிறக்கும் ஒருவர் இதுபோன்ற குழப்பங்களில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது! இவற்றில் வாக்கிய பஞ்சாங்கம், சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையிலும், திருக்கணிதம் நவீன அறிவியலின் துணையோடும் கணிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. Example : 01.எனனிடம் வந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயை சூரியன் கேது பார்கிறது. சூரியன் தந்தைக்குக் காரகன் செவ்வாய் சகோதர காரகன் கேது மோட்சத்திற்கு உரியவன் அதனால் அந்த பெண்ணிற்க்கு செவ்வாய் தசையில் கேது புத்தி நடக்கும் பொழுது தந்தையின் சகோதரனுக்கு மரணம் ஏற்படும். திருக்கணித பஞ்சாங்கத்தியில் செவ்வாய் தசையில் கேது புத்தி 06/10/2004 to 03/03/2005 வாக்கிய பஞ்சாங்கத்தியில் செவ்வாய் தசையில் கேது புத்தி 18/03/2009 to 15/08/2009 அந்த பெண்ணின் தந்தையின் சகோதரனுக்கு 19/05/2009ல் மரணம் ஏற்பட்டது. இதனால் வாக்கிய பஞ்சாங்கம் நமது வாழ்க்கையோடு ஓத்து வருகிறது என்று நான் நம்புகிறேன்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.
thanks a lot for giving idea about different version of panchagam. I really appreciate your effort and sharing of valueable information.
பதிலளிநீக்குThank you sir, The same thing happened my son birth.. He born on 01-09-2011(7.18am) ..As per Computer Jothidam his nakshandram Chithrai. But Our Jothidar told Astham .. Which one is correct..Which nakshatram I will consider.
பதிலளிநீக்குஎன்னுடைய பெயர் க.உதயன் நான் 1980/04/23. பிறந்தநான் செவ்வாய் பின்இரவு 4.00மணி என்று இருக்கின்றது.என்னுடைய நவாம்ச லக்கினமும் என்னுடைய பிறப்பு நட்சத்திரமும் தெரிந்து கொள்ளலாம.
பதிலளிநீக்குஎவ்வளவுதான் கிரக அசைவுகளை துல்லியமாக திருக்கணிதம் சொன்னாலும் தசா புக்தி பலன்கள் வாக்கிய பஞ்சாங்கம் கணித்த படியே என் வாழ்க்கையில் நடப்பதை காண்கிறேன்
பதிலளிநீக்கு