திங்கள், 1 ஜனவரி, 2018

0263. வீட்டில் மரம் வளர்க்க வேண்டும்?

0263. வீட்டில் மரம் வளர்க்க வேண்டும்?

01. ஒரு புங்க மரம்
02. புல்வெளி

வீட்டின் நிருதி  (தென்மேற்கு) மூலை வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள்
எதுவும் நிகழாது.
03. வீட்டுக்கு முன்பாக ஒரு வேப்ப மரம் இருக்க வேண்டும்.
04. அதற்குப் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும்.
05. ஒரு பப்பாளி மரமும் இருக்க வேண்டும்.

06. தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் நட வேண்டும்.

07. பாத்திரங்கள் கழுவும் இடத்துக்கு அருகில் தென்னை மரம் இருக்க வேண்டும்.
08. ஒரு எலுமிச்சை மரமும் இருக்க வேண்டும்.
09. எலுமிச்சை மர நிழலிலேயே ஒரு கறிவேப்பிலை செடி நட்டு வைக்க வேண்டும்.

010. துளசி
011. வீட்டுக்கு ஒரு நெல்லிக்காய்ச் செடி கட்டாயம் இருக்க வேண்டும்.

012. வறட்சி அதிகமாக உள்ள இடங்களில் சீதா, சீமை இலந்தை போன்ற பழங்களை
வளர்க்கலாம். 
வேலியின் நான்கு இடத்தில் சீதாப்பழம் மரம் இருக்க வேண்டும். 4

013. காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் பலா, அன்னாச்சி , ஆரஞ்சு
வகைப் பழங்களை வளர்க்கலாம். 
வீட்டில் நிறைய இடம் இருந்தால் பலாக்கன்றும் நடலாம்.

014. மா மரம் வைக்க வேண்டும். 10
015. கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
015. செடிக்காய்களான வெண்டைக்காய், முள்ளங்கி,கொத்தவரங்காய் ஆகியவை சின்ன
பைகளில் நேரடியாக விதைக்கலாம்.

016. அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை
பெரிய பை அல்லது 20 லிட்டர் வாளிகளில் நடலாம்.
இவற்றில் அவரை, புடலங்காய், பாகற்காய் கொடி காய்களாகும்.
அவற்றை பந்தலிட்டு படரவிட வேண்டும்.
அவரைகாயில் கொடியும் உள்ளது. செடியும் உள்ளது.

017. பழ வகைகளில் மாதுளைக்கு 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்ளாஸ்டிக்பை
அல்லது 50 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம்.
கொய்யாக்கு 75 லிட்டர் முதல் 100 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம்.

018. இட்லிபூ (வெட்சி) செவ்வரளி, மஞ்சளரளி ஆகியவற்றை 20 லிட்டர் பெயிண்ட்
வாளிகளில் வளர்க்கலாம்.

019. பூச்செடிகள் என்றால் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சாமந்தி (செவ்வந்தி)
சம்மங்கி ஆகியவற்றை மொட்டைமாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

020. கீரைகளில் கொத்தமல்லி, சிறுகீரை, அரைக்கீரை, பாலாகீரை, தண்டுக்கீரை,
வெந்தயக்கீரை, மிளகுத்தக்காளிக்கீரை ஆகியவற்றை விதைகள் மலம் உற்பத்தி செய்யலாம்.
புதினா, பொன்னாங்கனிக்கீரை ஆகியவற்றை குச்சி (போத்துகள்) மூலம் நடவு செய்து
உற்பத்தி செய்யலாம்.
வல்லாரை கீரை மட்டும் வேர்கள் மூலம் நடவு செய்து உற்பத்தி செய்ய முடியும்.

021. மாடியில் பன்னீர் திராட்சைப் பந்தல்.

022. மணத்தக்காளி, ஓமவல்லி போன்ற செடிகளை மாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

023. சோற்றுக் கற்றாழை 6 மாடித் தோட்டத்தில் அவசியம் வளர்க்க
வேண்டும்.

024. மாதுளை,ஆரஞ்சு போன்ற பழங்களையும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

025. அதிகமாக வெய்யில் உள்ள பகுதிகளில் மா, வாழை. கொய்யா,பப்பாளி,
சப்போட்டா போன்ற பழங்களை வளர்க்கலாம். 

026. மலைப் பிரதேசங்களில் குளிர் அதிகம் உள்ள இடங்களில் ஆப்பிள், பிளம்ஸ்,
பேரிக்காய், ஸ்ட்ராபரி போன்ற பழங்களை வளர்க்கலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.