திங்கள், 28 பிப்ரவரி, 2011

054. குருசந்திர யோகம்

054. குருசந்திர யோகம்

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம்
என்று கூறப்படும்.
குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை)
இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.

இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான
சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள்,
சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற
குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம்
உடையவர்கள்.

மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு
வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்
நாடாளும் யோகம் கிடைக்கும்.

பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய
பதவியில் அமர்வார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

சந்திரன் மனோகாரகன்.
அவர்தான் உடலுக்கு உரியவர்.
இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம்
பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும்.
எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும்
அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள்.
இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வர்மனைவி, குழந்தைகள் மீது
அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.

ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.

தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து
கொண்டே இருக்கும்.
நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன்
கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.

கோச்சாரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

மேஷம் 50%
ரிஷபம் 60%
மிதுனம் 40%
கடகம் 90%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 30%
தனுசு 60%
மகரம் 20%
கும்பம் 40%
மீனம் 60%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

053. புதஆதித்ய யோகம் பகுதி = II

053. புதஆதித்ய யோகம் பகுதி = II

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :

ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.

கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

052. பிரிவு

052. பிரிவு

ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால்
அதன் தசாபுக்தி காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

பிரிவு என்றால் வெளி இடம் ,ஊர், நாட்டில் வாழ்வது,or மரணம்.
ஏன்னேறால் சூரியன் - தந்தைகாரகன் சூரியனின் மகன் சனி
தந்தைக்கு மகன் எதிரி.

பிரிந்து வாழ்ந்தால் வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே
சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாத்கன்
இருப்பான்.
அதிகமான சொத்துக்கள் சேரும்.
நேர்மையானவனாக இருப்பான்,பெருந்தன்மை
உடையவனாக இருப்பான்.

9ல் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் ஜாதகன்
தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

ஜாதகத்தில் 9ல் இருக்கும் சூரியன் கெட்டுப்போய் இருந்தால் கோச்சார
சனி பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

I.ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 10ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் தனுசு 65%
ரிஷபம் மகரம் 55%
மிதுனம் கும்பம் 60%
கடகம் மீனம் 50%
சிம்மம் மேஷம் 50%
கன்னி ரிஷபம் 55%
துலாம் மிதுனம் 45%
விருச்சி கடகம் 50%
தனுசு சிம்மம் 50%
மகரம் கன்னி 50%
கும்பம் துலாம் 60%
மீனம் விருச்சிகம் 50%

II. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 7ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் துலாம் 95%
ரிஷபம் விருச்சிகம் 55%
மிதுனம் தனுசு 65%
கடகம் மகரம் 75%
சிம்மம் கும்பம் 85%
கன்னி மீனம் 55%
துலாம் மேஷம் 60%
விருச்சிக ரிஷபம் 75%
தனுசு மிதுனம் 75%
மகரம் கடகம் 55%
கும்பம் சிம்மம் 55%
மீனம் கன்னி 75%

III. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 3ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் கும்பம் 80%
ரிஷபம் மீனம் 55%
மிதுனம் மேஷம் 50%
கடகம் ரிஷபம் 65%
சிம்மம் மிதுனம் 75%
கன்னி கடகம் 55%
துலாம் சிம்மம் 45%
விருச்சிகம் கன்னி 70%
தனுசு துலாம் 80%
மகரம் விருச்சிகம் 50%
கும்பம் தனுசு 55%
மீனம் மகரம் 75%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I

051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் சகோதர
வகையில் உதவிகள் உண்டு.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
ரிஷபம் சிம்மம் குரு உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளால் பண உதவிகள்,
பொருளுதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்
சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும்.
சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால்
சகோதரங்கள் மதிப்பார்கள்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின் சேவகாதிபதியான
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால்
இளைய சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் செவ்வாய் ஆட்சிப் பெற்று 5-ம் வீட்டில் அமர்ந்ததால் சகோதர வகையில்
இருந்த மனவருத்தம் விலகும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது இளைய சகோதரத்தோடு
இருந்த விரிசல் மறையும்.
கடகம் யோகாதிபதி  செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் 4-ம் வீட்டில்
ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் பாசமான விசாரிப்புகள்
ஆறுதலாக இருக்கும்.
சகோதர வகையில் பலனமடைவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
கன்னி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சகோதர வகையில் சச்சரவுகள் வந்து
விலகும்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சகோதரங்கள் மதிப்பார்கள்.
கன்னி மூன்றில் சனி இருப்பதால் சகோதரர்களுடன் சற்று அனுசரித்துப் போவது
நல்லது!
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு
நிறைவேற்றுவீர்கள். 

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 9 பிப்ரவரி, 2011

050. அஷ்டமி திதி

050. அஷ்டமி திதி

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என
முன்னோர்கள் கூறுவர்.
அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;
தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது
அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை
சமாளித்தார்; கண்ணன்தானே கொடியவன் கம்சனை
அழித்தான்? இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும்
நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள்
எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான்
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள்
(திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்
உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள்
ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை
என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு
தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி
திதிகள் ஏற்றவையாகும்.

அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?

நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும்
செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச்
செய்வது! இவற்றைதான் கண் மூடிப் பழக்கம்' அவை
என்று.

எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று
சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன!
உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை
எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?

மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை
அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!

காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி'
எனப்படும் எட்டாவது திதியில்தானே!

துர்க்காஷ்டமிம் அன்றுதான் இந்த நாட்களை கண்ணன்,
துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக
வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான
மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர்.
பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று
சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும்
தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர்.
வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.

பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே
ஓம் நமோ நாராயணாயா' என்பது.

நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித்
தேடும் செல்வமும் எட்டு வகை! அவை அஷ்ட ஐஸ்வர்யம்
என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும்
அஷ்ட லட்சுமிகள் என்ற உருவங்கள் உண்டு.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு
திருமுறைகள் சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் பாடிய
தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால்
முற்பட்டவர். மேலும் மணி வாசகர் சொல்லச் சொல்ல
தில்லை சிற்றம்பல வாணன் கைப்பட எழுதியது என்று
நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை
திருவாசகத்திற்கு உண்டு.

அதுமட்டுமல்ல; திருப்பெருந்துறையில் குருந்த
மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக
வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த
உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான்
திருவாசகம். "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க' என்று
முதன்முதல் பாடியதுதான் "சிவபுராணம்' எனப்படும்
திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த
சிவபெருமானே திருவாதவூரரை "மாணிக்க வாசக' என்று
தன் திருவாயால் அழைத்தார்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது
பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில்
பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், "மணிவாசக,
பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்று
திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப்
பெருமான் பாடி யதே திருக்கோவையார் என்னும் அற்புத
நூல். இது அகப் பொருள் துறையில் அமைத்துப் பாடியது.
திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.

எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே "தலைமை
மந்திரம்' என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:

பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-

"ஓம் ஈசானாய நம',
"ஓம் தத்புருஷாய நம',
"ஓம் அகோரேப்யே நம',
"ஓம் வாமதேவாய நம',
"ஓம் சத்யோஜாதாய நம.'
இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-
"ஓம் ஹ்ருத்யாய நம' (இதயம்),
"ஓம் சிரசே நம' (தலை),
"ஓம் சிகாயை நம' (முடி),
"ஓம் கவசாய நம' (கவசம்),
"ஓம் நேத்ரேப்யோ நம' (கண்),
"ஓம் அஸ்த்ராய நம' (கை).

மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும்.
இதில் எட்டாவது மந்திரம் "சிகாயை நம'.

சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில்
எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை.
அதனால் எண் சாண் உடம்பிற்கு  சிரசே பிரதானம்
எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு
மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும்
வெளி.

மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச்
சொல்லப்பட வேண்டியவை:

நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட்.

என்பவையாகும். வணங்கும்போது "நம' என்று சேர்த்துச்
சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி
செய்யும்போது (தானம்) "ஸ்வதா' சேர்க்க வேண்டும்.
யாகத்தில் பொருளைத் தரும்போது "ஸ்வாஹா' என்று
சேர்க்க வேண்டும்.

"ஸ்வாஹா' என்பது அக்னி தேவனின் மனைவி பெயர்.
யாகத் தீயில் இடும் பொருள் களை இந்த "ஸ்வாஹா'தான்
உரிய தேவர் களிடம் கொண்டு சேர்ப்பவள்.

திருவாசகம் எட்டாது திருமுறை. ஆகவே அது சிகா
மந்திரம்- தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில்
மிகவும் உயர்வானது திருவாசகமே.

ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக்
கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட
வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு
கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக்
கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது.

அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால்
தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள்
சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி
தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு
காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி
கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு
அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு
பலன்களை தரும் என்று அவர் கூறினார்.

Example :01. அஷ்டமி திதியில் பிறந்தவர் அத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார்.திருமனம் போராட்டத்தில் 04/11/2005ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

049. கஜகேசரி யோகம்!

049. கஜகேசரி யோகம்!

மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும்
ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால்
சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின்
பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம்
கஜகேசரி யோகம்.

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம்,
பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு,
ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம்
கொடுக்கும்.

மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு
சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும்
சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு
அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்த யோகம் எப்போது உண்டாகும்?

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய
ஜாதகத்தில் அவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர
வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம்
உண்டாகும்.

இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே
மாதிரிப் பலன் உண்டா?

இல்லை!

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில்
அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன்
மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில்
இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி
மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று
ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில்
உட்கார்ந்திருக்கக்கூடாது.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?

எப்போது பலன் கிடைக்கும்?

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும்,
புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

Example :01. சந்திரன் = விருச்சிகம் 01/06/1950 நீச கிரகம் 30%.
சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996

Example :02. சந்திரன் = மகரம் 09/12/1964 சமம் 65%.
சந்திரன் தசை 23 - 09 - 1994 to 23 - 09 - 2004

Example :03. குரு = மேஷம் 09/12/1964 நட்பு 40%.
குரு தசை 23 - 09 - 2029 to 23 - 09 - 2045

Example :04. குரு = மகரம் 02/09/2009 நீச கிரகம் 70%
குரு தசை 02 - 03 - 2034 to 02 - 03 - 2050

Example :05. சந்திரன் = மகரம் 02/09/2009 சமம் 60%
சந்திர தசை 02 - 03 - 2119 to 02 - 03 - 2129

Example :06. சந்திர விருச்சிகம் 23 - 07 - 1980 நீச கிரகம் 45%
சந்திர தசை 13 - 03 - 2046 to 13 - 03 - 2056

Example :07.குரு சிம்மம் 23 - 07 - 1980 நட்பு 55%
குரு தசை 13 - 03 - 2081 to 13 - 03 - 2097

Example :08.குரு = கும்பம் 01/06/1950 சமம் 25%.
குரு தசை 27.08.2021 to 27.08.2037

Example :09.குரு = கடகம் 11/07/1943 உச்சம் 75%.
குரு தசை 30.05.1964 to 30.05.1980

Example :10.சந்திரன் = கன்னி 12/04/1987 நட்பு 35%.
சந்திரன் தசை 13 - 05 - 1987 to 13 - 05 - 1997

Example :11.குரு = மீனம் 12/04/1987 ஆட்சி 65%.
குரு தசை 13 - 05 - 2022 to 13 - 05 - 2038

Example :12.சந்திரன் = தனுசு 23/09/2004 சமம் 55%
சந்திர தசை 01 - 04 - 2016 to 01 - 04 - 2026

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

048. சுக்கிரன் தரும் பலன்

048. சுக்கிரன் தரும் பலன்

அசுவதி கார்த்திகை பூசம் சோதி ரேவதி ஆகி
நட்சத்திரகளில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில்
பிறந்த ஜாதகர் லட்சுமி புத்திர என்று கூறவேண்டும்.
இதுபோல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை மேலும் நடந்தால்
இன்னும் விசேஷமாகும்.

EXAMPLE 01.அசுவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.06.1950 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 27.08.1960 to 27.08.1980 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.

EXAMPLE 02.ரேவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 05.05.1953 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா.

EXAMPLE 03.பூசம் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 14.06.1975 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 29.12.1988 to 29.12.2008 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.

EXAMPLE 04.சோதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.10.1976 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 01.10.1976 to 21.09.1988 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

047. கிரகங்களும் நோய்களும்

047. கிரகங்களும் நோய்களும்

சேர்க்கை, மற்றும் பார்வைகளால் அவைகள்
உண்டாகும் உண்டாகும் என்பது பொதுப்பலன்

உண்டாகமலும் போகலாம். அது தனிப்பட்ட
ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களால்
உண்டாகமலும் போகலாம்.

1
செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி
Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic
disorder, medical problems affecting the joints and
connective tissue.

2
சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள்,
எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
Saturn, Sun = Body Problems and bone diseases

3.
செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள்,
நீரழிவு நோய்கள்
Mars, Mercury = Digestive diseases, diabetes

4.
சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள்
Saturn, Ketu = Diseases of the nervous system

5.
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள்,
ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும்
அதில் அடக்கம்!
Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases,
including hysteria

6. செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Mars, Saturn, Rahu = Skin diseases

7.
சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு =
மூத்திரப் பை, கர்ப்பப்பை போன்றவற்றில்
ஏற்படும் உபாதைகள் & நோய்கள்
Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter =
Urinary and gynaecological problems

8.சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை
போன்றவற்றில் ஏற்படும் நோய்கள்
Saturn, Mars = Dental problems & Ear nose, and
throat problems

9. சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான
நோய்கள்
Saturn, Mars = Blood-related problems

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

046. அர்த்தாஷ்டம சனி பகுதி = I

046. அர்த்தாஷ்டம சனி பகுதி = I

ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4
ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை
அர்த்தாஷ்டம சனி என்கிறோம். ஜென்ம ராசிக்கு நான்காம்
வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு
சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து
வேறுபாடு ஏற்படும்

ஜாதகத்தில் இருக்கும் சந்திரனுக்கு 4ல் கோள்சார சனி பலன்

மேஷம் கடகம் 30%
ரிஷபம் சிம்மம் 60%
மிதுனம் கன்னி 60%
கடகம் துலாம் 90%
சிம்மம் விருச்சிகம் 40%
கன்னி தனுசு 50%
துலாம் மகரம் 60%
விருச்சிகம் கும்பம் 40%
தனுசு மீனம் 40%
மகரம் மேஷம் 20%
கும்பம் ரிஷபம் 50%
மீனம் மிதுனம் 50%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

045. ஆன்மிகவாதிகள்

045. ஆன்மிகவாதிகள்

மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால்
தெளிவடைவீர்கள்.
மேஷம் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில்
ஈடுபாடு உண்டாகும்
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் சித்தர் பீடங்களின் தொடர்பும் கிடைக்கும். 
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
ஆன்மிகப் பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
தியானம், யோகா, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் தெய்வீக ஈடுபாடு
அதிகரிக்கும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் திருமணம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
கும்பம் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக
நாட்டம் அதிகரிக்கும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.